Friday, May 30, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை - சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்பு

தாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை – சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்பு

காலி – ஹபராதுவ பிரதேசத்தில் தாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனை ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரமோத சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த சிசுவின் தாய், குழந்தையை அவரது தந்தையின் வீட்டில் விட்டுச் சென்றதாகவும், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் குழந்தை பெரும் துன்பப்படுவதாக சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, அவர் தனது பணியாளர்களுடன் அந்த வீட்டிற்கு சென்று குழந்தையை மீட்டுள்ளார்.

அருகில் உள்ள வீட்டில் இருந்து குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டதுடன், குழந்தையை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமணமாகி குழந்தை பிறந்தபின் குறித்த தாய் (25) தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் இருந்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி காலை ஹபராதுவ நகருக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற குழந்தையின் தாய் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து தகவல் கிடைக்கபெற்ற ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரமோதா சிறிவர்தன, ஹபராதுவ பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளுக்கு அறிவித்ததுடன் குழந்தையின் பெற்றோருக்கு எதிராக ஹபராதுவ பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

#Lankasara

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles