Sunday, July 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉர விநியோகத்திலிருந்து அரசாங்கம் விலக தீர்மானம்

உர விநியோகத்திலிருந்து அரசாங்கம் விலக தீர்மானம்

2023/24 மகாபருவ உர விநியோகத்தில் இருந்து விலகுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பல விடயங்களில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நெல் மற்றும் சோளம் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா மற்றும் ஏனைய உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் மானியமாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி மகா பருவத்துக்கு தேவையான யூரியா உரம் உள்ளிட்ட அனைத்து உரங்களும் தனியாரால் வழங்கப்படுவதுடன், உரங்களை வாங்க தேவையான பணம் விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 50,000 ரூபாவுக்கு மேல் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles