பாடசாலைகளில் மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்து அவர், எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி பாடசாலை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
காவல்துறையினர் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இதற்காக பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
நாடு முழுவதும் உள்ள 100 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 10,155 பாடசாலைகளிலும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
இந்த விடயம் தொடர்பான ஆலோசனைகள் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.