தெபத்கம பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பாறைக்கு கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றும் இருவர் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.