Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - பிரமித்த பண்டார

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் – பிரமித்த பண்டார

இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என தான் கருதுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுடனான செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை நாங்கள் கொண்டு வர வேண்டும். ஆனால் மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
அப்படியானால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனித உரிமைகள் பற்றியும் அப்பாவிகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
இந்த நாட்டு மக்களுக்கு முதலில் நாம் செய்ய வேண்டிய மிக உயர்ந்த கடமை, அது அப்பாவிகளைப் பாதுகாப்பதாகும்.
இளைஞர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் நாங்கள் கடுமையாகவும் கண்டிப்புடனும் இருக்கிறோம்.
மரண தண்டனையை ஊக்குவிக்க நாங்கள் விரும்பவில்லை என்றாலும், இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக, இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்பதால் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும், போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்த நாட்டிலிருந்து ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும், “புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles