எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இலங்கை பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.
2050 ஆம் ஆண்டுக்கு தயாராக இருக்கும் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வர்த்தகத் தலைவர்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி , நாட்டை மறுசீரமைப்பதில் தனியார் துறைக்கு முக்கிய பங்கு உண்டு என குறிப்பிட்டார்.