Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனா கமகே இலங்கை பிரஜை?

டயனா கமகே இலங்கை பிரஜை?

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் சமர்ப்பித்த கடிதத்தில் டயனா கமகே 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து குடியுரிமையை பெற்றுள்ளார்.

அவர் 521398876 என்ற இங்கிலாந்து கடவுச்சீட்டை வைத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“இருப்பினும், அவர் ஜனவரி 24, 2014 அன்று N 5091388 என்ற இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற முடிந்தது. அவர் நவம்பர் 5, 2018 அன்று இராஜதந்திர கடவுச்சீட்டையும் பெற்றுள்ளார்.

அதை நிரூபிக்கும் ஆவணத்தை அவர் சமர்ப்பிக்காததால், புதிய இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க முடியாது. அவர் தனது இங்கிலாந்து குடியுரிமையை விட்டுவிட்டார்” என கட்டுப்பாட்டாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

டயனா கமகே அனுப்பிய விசா விண்ணப்பங்களின் ஆவணங்களையும் கட்டுப்பாட்டாளர் இணைத்துள்ளார்.

அப்போது அவையில் இருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டயனா கமகேவின் கடவுச்சீட்டு விவகாரத்தை நாடகமாக்க வேண்டாம் என தெரிவித்தார்.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles