சர்வதேச அபிவிருத்தி ஸ்தாபனத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவதற்கான இயலுமை இலங்கைக்கு கிடைப்பதை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச அபிவிருத்தி ஸ்தாபனத்திடம் (IDA) இருந்து இலங்கை சலுகையுடன் கூடிய நிதியுதவியைப் பெற முடியும்.