யாழ்ப்பாணம்- அச்சுவேலி, புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று(04) மாலை இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.