இந்த வாரம் நாளாந்தம் 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
6,8,9 ஆகிய தினங்களில் வழமைப் போன்று பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுலாக்கப்பட்டும்.
7ஆம் திகதி பௌர்ணமி என்பதால் அன்று பிற்பகல் 3 மணியில் இருந்து 6 மணி வரையான காலப்பகுதியில் 1 மணி நேரம் மின்வெட்டு அமுலாகும்.