முட்டையொன்றில் விலை அடுத்தடுத்த வாரங்களில் 75 ரூபாவாக உயரும் என்று முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உற்பத்தி செலவின் அதிகரிப்பு காரணமாக முட்டை விலை கணிசமாக அதிகரித்து வருகிறது.
அரசாங்கம் இதில் தலையீடு செய்து, உற்பத்தி செலவினங்களின் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ள கோழிக் குஞ்சுகளின் விலை மற்றும் தீவனங்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாத பட்சத்தில் முட்டை விலை 75 ரூபாவுக்கும் அதிகமாக உயரும் என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.