பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயங்கும் பொது போக்குவரத்து பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அதிவேகமாகச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.