சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வேறு நாட்டிற்கு இடம்பெயர முற்பட்ட வேளையில் சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களைக் கொண்ட குழுவில் சிலர் நாடு திரும்புவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதில் 85 பேர் நாடு திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் கூறினார்.
அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.