மின் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (25) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு அலகு மின்சாரத்தை உருவாக்க 56.90 ரூபா விரயமாகிறது.
ஆனால் ஒரு அலகுக்கு 29 ரூபா மட்டுமே அறவிடப்படுவது பெரும் நட்டமாகும்.
எனவே, யார் ஜனாதிபதியாகவோ, நிதியமைச்சராகவோ அல்லது புதிய அரசாங்கமே வந்தாலும், இன்னுமொரு மின் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது’ என அவர் மேலும் தெரிவித்தார்.