கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவம் தொடர்பில் கப்பலின் கெப்டன் உட்பட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (25) உயர்நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதனையடுத்துஇ குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதுடன் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்துக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.