Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுரொனால்டோவுக்கு போட்டித் தடை - 50,000 பவுண்ட்ஸ் அபராதம்

ரொனால்டோவுக்கு போட்டித் தடை – 50,000 பவுண்ட்ஸ் அபராதம்

போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 50,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ப்றீமியர் லீக் போட்டியொன்றின்போது இளம் ரசிகர் ஒருவரின் தொலைபேசியை தாக்கியமை தொடர்பான விசாரணைகளையடுத்து, இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கத்தினால் நேற்று (23) இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மென்செஸ்டர் கழகத்தில் விளையாடி வந்த ரொனால்டோஇ அக்கழகத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என அக்கழகம் நேற்று முன்தினம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles