தேர்தல் பிரசார செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.