செஸ் வரி அதிகரிப்பால் பாடசாலை உபகரணங்களின் விலைகள் கணிசமாக உயர்வடைந்துள்ளன.
இறக்குமதி செய்யப்படும் பாடசாலை உபகரணங்களுக்கு செஸ் வரி அதிகரிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும்.
இது தொடர்பாக இன்று நாடாளுமன்றில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
இதன்போது விளக்கமளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாடசாலை உபகரணங்களின் விலையதிகரிப்பில் செஸ் வரி தாக்கம் செலுத்துமாக இருந்தால், அதனை நீக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.