இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுமார் 380,000 அவுஸ்திரேலிய டொலர்களை (இலங்கை நாணய மதிப்பில் 96 இலட்சம் ரூபா) செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணை துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்இ நேற்று கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு மேலதிக ஆதரவை வழங்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
#Daily Mirror