Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகண்டியில் மண்ணெண்ணெய் இல்லையாம்

கண்டியில் மண்ணெண்ணெய் இல்லையாம்

கண்டி மாவட்டத்தில் தற்போது மண்ணெண்ணெய் இல்லை என லக்ஷ்மன் கிரியெல்ல MP தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு வழியில்லாததுடன், கண்டியில் கறுப்புச் சந்தையில் கூட மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டதாக சுட்டிக்காட்டினார்.

இப்பிரச்சினைகளால் சிறு வணிகர்களும், பொது மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

எனவே இந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு பிரதமரிடமும் அரசாங்கத்திடமும் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles