இலங்கையின் பணவீக்கம் அடுத்த ஆண்டு இறுதியில் 4-5 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமுலாக்கப்பட்டுள்ள நாணயக்கொள்கையின் அடிப்படையில் பணவீக்கத்தை இவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அதிக வட்டிவீதத்தினால் நலிவுற்றோருக்கு நிவாரணம் வழங்குவதற்கு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.