கல்கமுவ – இஹலகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜரொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கார் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது வாகனத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இருவரும் கல்கமுவ மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.