உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தை எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் 16 சுயாதீன அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தேர்தல் ஆணையத்திற்குச் சென்ற குழுவினருடன் ஆணையாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் பல விடயங்கள் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.