வியட்னாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு அவர்கள் இது தொடர்பான காணொளி ஒன்றை அனுப்பி வைத்து இந்த விடயத்தைக் கூறியுள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் என்ற அடிப்படையில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்தோம்.
கடலில் பல நாட்களாக அசுத்தமான தண்ணீரையும் உணவையும் உட்கொண்டு இவ்வளவு தூரம் வந்து, மீண்டும் இலங்கைக்குச் சென்று அங்குத் துன்பப்படுவதற்கு நாங்கள் தயாராக இல்லை.
எனவே ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு எங்களை இலங்கைக்கு அனுப்பாமல் மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.