முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் பொதுமக்கள் நுழைந்த போது, அங்குள்ள அறையொன்றிலிருந்து 17.8 மில்லியன் ரூபா பணம் மீட்கப்பட்டிருந்தது.
இந்த பணம், அதனை மீட்ட இளைஞர்களால் கோட்டை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெறுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
