Wednesday, July 16, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு449 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

449 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

449 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இந்தியாவில் இருந்து கஞ்சாவினை கடல்மார்க்கமாக கடத்திய போதே கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 449 கிலோ கஞ்சா மற்றும் படகு என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் அல்லைப்பிட்டி மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் சான்றுப் பொருட்களுடன் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles