Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் 12, 431 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

இதன்படி, ஜனவரி 1ம் திகதி முதல் நவம்பர் 7ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 580,689 சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாத ஆரம்பத்தில் ரஷ்யாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles