Monday, May 26, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி விபத்தில் 4 வயது குழந்தை பலி

முச்சக்கர வண்டி விபத்தில் 4 வயது குழந்தை பலி

கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் – அனுராதபுரம் வீதியில் மரச்சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று (07) பிற்பகல் பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் 04 வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles