Sunday, May 31, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு300 கிலோ ஹெரோயினுடன் 10 பேர் கைது

300 கிலோ ஹெரோயினுடன் 10 பேர் கைது

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப் பொருள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள தரப்பினர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles