கெப்பிதிகொல்லேவ பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற அமைதியின்மையின்போதான தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் – கெப்பிதிகொல்லேவ பிரதேசத்தில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அதன்பின்னர் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து நேற்று (31) இரவு அங்கு கடுமையான பதற்றம் நிலவியது.
போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தில் காயமடைந்த அவர் சிகிச்சைகளுக்காக பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.