Monday, January 19, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தை - மகன் தகராறின் நடுவில் சென்ற பேரன் மீது அசிட் தாக்குதல்

தந்தை – மகன் தகராறின் நடுவில் சென்ற பேரன் மீது அசிட் தாக்குதல்

அசிட் வீச்சில் படுகாயமடைந்த 11 வயது சிறுவன் ஒருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (31) பிற்பகல் அம்பலாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் அசிட் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தனது பிள்ளையை அழைத்து வர சென்ற தந்தை மீதே பாட்டன் அசிட் வீச்சை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தை மீது அசிட் வீசப்படுவதை தடுக்கும் முகமாக குறித்த சிறுவன் நடுவில் பாய்ந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மகன் மற்றும் பேரன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அசிட் வீச்சை மேற்கொண்ட நபரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளதுடன்இ தற்போது வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles