ஹிக்கடுவை திராணகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று (31) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காகச் சென்ற இருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.