நாட்டிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகள் சிலவற்றை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல நிறுவனத் தலைவர்கள் தயாராகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழில் பாதுகாப்பின்மையை எதிர்நோக்க நேரிடும் என சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, அதன் தேசிய அமைப்பாளர் எரந்தி ரணவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
டொலரை ஈட்டித்தரும், ஆடைத் தொழிற்துறையை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.