Sunday, September 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை போக்கு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட குழுவினர் கவலை

இலங்கை போக்கு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட குழுவினர் கவலை

பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் உள்ளமை மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் அமுலாக்கப்படாமை என்பன குறித்து ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட குழுவினர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின் போது, ஆணைக்குழுவிற்கு பூரண ஆதரவை வழங்க தயாராகவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விஜயத்தின் போது, இலங்கை தற்சமயம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தமது கரிசனையை வெளியிட்டுள்ளனர்

இதுதவிர, பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் உள்ளமை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைதியான போராட்டம் குறித்த விசாரணைகள் தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டதுடன், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் அமுலாக்கப்படாமை குறித்தும் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளை இன்று சந்தித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் இலங்கை மனித ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles