Sunday, May 25, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎனக்கு எந்தவொரு பயணத் தடையும் விதிக்கப்படவில்லை - ரஞ்சன் விளக்கம்

எனக்கு எந்தவொரு பயணத் தடையும் விதிக்கப்படவில்லை – ரஞ்சன் விளக்கம்

குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட பிழையினால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாம் இன்று அமெரிக்கா செல்வதற்கான அனுமதியைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்கவை, நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து இன்று ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும், தனது வழக்கறிஞர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்தே தான் அமெரிக்காவிற்கும் கனடாவிற்குமான பயணத்தைத் திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பு புதுப்பிக்கப்படவில்லை என்பதனாலேயே தனக்கு வெளிநாடு செல்ல கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles