இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (26) இரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் படகுடன் ஏழு மீனவர்களi கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து சென்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.