திலினி பிரியமாலியின் திகோ குழுமம் நடத்தப்படும் உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியின் உரிமையாளருக்கு சுமார் ஒரு கோடி ரூபா வாடகை செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.
அத்துடன், அவர் கதிர்காமத்திற்கு ஹெலிகொப்டரில் சென்றுள்ளதாகவும், ஒவ்வொரு பயணத்திற்கும் 10 இலட்சத்திற்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலிக்கு எதிராக கிடைக்கப்பெற்ற 11 முறைப்பாடுகள் தொடர்பில் கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் எனக் கூறும் ஜானகி சிறிவர்தனவிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.