Monday, December 29, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுப்பைக் குழியிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு

குப்பைக் குழியிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு

பல நாட்களாக காணாமல் போயிருந்த நபர் ஒருவரின் சடலம் குப்பைக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மல்சிறிபுர, ரேஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

அதன் பிரகாரம், மல்சிறிபுர பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று காணாமல் போனவரின் வீட்டை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் நேற்று (24) குறித்த நபரின் சடலம் குப்பைக் குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபரின் சடலம் துணியால் சுற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் 69 வயதுடையவர் எனவும் அவர் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த வீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் 43 வயதுடைய நபரொருவர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

அவரும் நேற்று (23) வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகத்திற்கிடமான மரணங்களுக்கு இடையில் தொடர்பு உள்ளதா என்ற கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குப்பைக் குழியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான நீதவான் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் இன்று (25) நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles