Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னாள் அமைச்சர்கள் இருவர் செய்த மோசடி அம்பலமானது

முன்னாள் அமைச்சர்கள் இருவர் செய்த மோசடி அம்பலமானது

2015-2019 காலகட்டத்தில் இருந்த ஒரு முன்னாள் சுகாதார அமைச்சரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் தமது அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களின் வரம்பை மீறி 24 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது.

இதன்படி, சுகாதார அமைச்சர் 16 வாகனங்களையும், இராஜாங்க அமைச்சர் 8 வாகனங்களையும் பயன்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அமைச்சருக்கு வருடாந்த எரிபொருள் கொடுப்பனவாக 20 இலட்சம் ரூபாவும், இராஜாங்க அமைச்சருக்கு 40 இலட்சம் ரூபாவும் அமைச்சர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை விட மேலதிகமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#Lankadeepa

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles