Wednesday, June 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினியை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்கவில்லை - நாமல் ராஜபக்ஷ

திலினியை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்கவில்லை – நாமல் ராஜபக்ஷ

திலினி பிரியமாலியின் பணப் பரிவர்த்தனைகளுடன் தமக்கோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள எவருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேக நபரையும் மற்றுமொரு நபரையும் விடுவிக்குமாறு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளை மறுப்பதாக கூறியுள்ளார்.

இச்சம்பவத்தில் தமக்கு தொடர்பில்லாததால் பொலிஸாரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தொழில்களில் முதலீடு செய்ய அரசியல்வாதிகளுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles