திலினி பிரியமாலி எனும் பெண்ணின் நிறுவனத்தில் தாம் 1000 கோடி ரூபாவை முதலீடு செய்ததாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க பதில் அளித்துள்ளார்.
இதன்படி, திலினி பிரியமாலி என்ற பெண்ணை தனக்குத் தெரியாது எனவும், தாம் ஒரு வருடம் ஏழு மாதங்கள் பதினான்கு நாட்கள் சிறையில் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
எனவே, திலினி பிரியமாலியுடன் தாம் கொடுக்கல் வாங்கல் செய்ததாக எவரும் குற்றம் சுமத்த முடியாது என பிரபல திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.