Wednesday, July 9, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வாங்க திலினியிடம் பணம் பெறவில்லை - எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் வாங்க திலினியிடம் பணம் பெறவில்லை – எரிசக்தி அமைச்சர்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணிடம் இருந்து இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பணமோ அல்லது பங்களிப்புகளோ பெறப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதிக்கான பணம் இலங்கை மத்திய வங்கியிடமிருந்தும் நாட்டிலுள்ள ஏனைய வங்கி முறைமைகள் ஊடாகவும் மட்டுமே பெறப்படுகிறது.

எரிபொருள் இறக்குமதிக்காக வேறு எந்த மூன்றாம் தரப்பினரிடமும் பணம் பெறவில்லை என்று அவர் கூறினார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles