வவுனியா – போகஸ்வெவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 30 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள பாடசாலையின் வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு, இன்று காலை கலைந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்நிலையில், குளவி கொட்டுக்கு இலக்கான 22 பேர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.