நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக இன்றைய தினம் (15) எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
கடந்த முதலாம் திகதி எரிபொருள் விலைமாற்றத்தை அறிவித்தபோது, அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.
தற்போது இலங்கையில் பெட்ரோல் 92 ஒக்டேன் லிட்டர் ஒன்றுக்கு 33.62 ரூபாவும், 95 ஒக்டேனில் லீட்டருக்கு 159.61 ரூபாவும், டீசலுக்கு 1.55 ரூபாவும், சுப்பர் டீசலுக்கு 41.89 ரூபாவும் அரசாங்கம் இலாபம் பெறுகிறது.
இந்தநிலையில் இன்றைய தினம் பெரும்பாலும் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.