இலங்கை ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையிலேயே தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
உலக உதவிகளை அதிகமாக பெற்றுக்கொள்ளும் நோக்கில், இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையில் இருந்து, குறைவருமானம் பெறும் நாடாக தரமிறக்க அரசு திட்டமிட்டது.
இதற்காக அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டது.
ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டாலும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே இலங்கை உள்ளது என்று IMF அறிவித்துள்ளது.
IMFஇன் விரிவாக்கப்பட்ட நிதி வசதி என்பது ஒரு சலுகை அல்ல என்றும், இது ஒரு வழமையான IMF உதவி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.