Friday, September 19, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத இறுதியில் நிலக்கரி கப்பல் இலங்கைக்கு

மாத இறுதியில் நிலக்கரி கப்பல் இலங்கைக்கு

நிலக்கரி ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் எதிர்வரும் 24 அல்லது 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக சிலோன் நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

60,000 மெற்றிக் டன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பின்னர் 10 நாட்களுக்குள் இவ்வாறான மேலும் மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தலா 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி இருப்புக்கள் குறித்த கப்பல்களில் இருந்து கொண்டு வரப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், தேவையான நிலக்கரி கையிருப்பு போதிய காலத்திற்குள் நாட்டில் பெற்றுக்கொள்ளப்படும் என நிலக்கரி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles