Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமசகு எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்த முடியவில்லை -எரிசக்தி அமைச்சு

மசகு எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்த முடியவில்லை -எரிசக்தி அமைச்சு

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கு இதுவரை பணம் செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 10ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த கப்பல் 100,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இலங்கைக்குக் கொண்டு வந்தது.

அதன்படி எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வந்து 32 நாட்கள் ஆகின்றன.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எக்ஸ்டோ எனப்படும் இந்த மசகு எண்ணெய் மூலம் டீசல் மற்றும் பெற்றோலை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை வந்தடைந்த 36,000 மெட்ரிக் டன் பெற்றோல் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டதையடுத்து, அதன் இருப்புகளை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles