Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் காணி ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறுதி கட்ட போர் நடவடிக்கையின்போது உக்கிர போர் நடைபெற்ற மண்ணாக ஆனந்தபுரம் உள்ளது.

இந்நிலையில் ஆனந்தபுரம் கிருஷ்ணர் கோவிலுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை இன்று (12) முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைபாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles