Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான மனு குறித்து நீதிமன்றின் உத்தரவு

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான மனு குறித்து நீதிமன்றின் உத்தரவு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை நவம்பர் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை வங்குரோத்து நிலையில் உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles