ஐந்து இலட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கிரிவத்துடுவ – ஆடியமுல்ல பிரதேசத்தில் நேற்று (9) இரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
